தாமதமாகத் தொடங்கி
நீடித்துப் பெய்யும்
மரத்தடி மழையாகவே
உன் காதல்!
**************************
அவசியங்கள் எதுவுமற்று
அன்பால் எழுதப்பட்டதால்
நிபந்தனைகளின்றி நீடிக்கிறது
நம் இருவருக்கும்
பொதுவிலான
கற்பெனும் நற்குணம்!
**********************************
*வலிமையான முத்தம்*
மகிழ்ச்சி
நிறைந்த நேரங்களில்,
ஆசையாக
உதடுகளில்
கொடுத்ததை விட!
கவலை
மிகுந்த தருணங்களில்
ஆறுதலாக
நெற்றியில் கொடுத்தது
அதிகம் இனிக்குதடி!
******************************